Saturday, September 14, 2013

பிளஸ் 1 தேர்வெழுத வந்த போதை மாணவர் இடைநீக்கம்

குடிபோதையில், பள்ளியில் காலாண்டு தேர்வு எழுத வந்த, பிளஸ் 1 மாணவர், பள்ளியில் இருந்து, 20 நாள், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை, அரசு மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 1 வரலாறு பிரிவு மாணவர்கள் தேர்வு எழுதிய அறையில், நேற்று முன்தினம், மது வாடை அடித்தது. மாணவர்களிடம் ஆசிரியர் சோதனை நடத்தியதில், மாணவர் ஒருவர் குடி போதையில் வந்தது தெரியவந்தது. அவரிடம், விசாரித்ததில், திருமண விருந்துக்கு சென்று, மது அருந்தி விட்டு வந்ததாக தெரிவித்தார்.

இதுகுறித்து ஆசிரியர்கள், பள்ளி தலைமையாசிரியரிடம் தெரிவித்தனர். அவர், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். மாணவரின் பெற்றோர் பள்ளிக்கு அழைக்கப்பட்டு, தாசில்தார் மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். சம்பந்தப்பட்ட மாணவரை, பள்ளியில் இருந்து, 20 நாட்கள் சஸ்பெண்ட் செய்தனர். கடந்த ஆண்டு, இதே பள்ளியில் மது அருந்தி வந்த மாணவர், பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment