Friday, September 13, 2013

ஆர்.எம்.எஸ்.ஏ தென் மண்டல ஆய்வு கூட்டம்: 8 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்பு


பாளை.,யில் நாளை (14ம் தேதி) நடக்கும் ஆர்.எம்.எஸ்.ஏ தென் மண்டல அளவிலான ஆலோசனை கூட்டத்தில் 8 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.ஆர்.எம்.எஸ்.ஏ திட்டத்தின் சார்பில் தென் மண்டல அளவிலான அனைத்து நிலை பணியாளர்கள் ஆய்வு கூட்டம் நாளை (14ம் தேதி) மேலத்திடியூர் பி.எஸ்.என் இன்ஜினியரிங் கல்லூரியில் நடக்கிறது. இதில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த தலா
உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், இன்ஜினியர்கள் பங்கேற்கின்றனர். ஆர்.எம்.எஸ்.ஏ திட்ட இயக்குனர் சங்கர் தலைமை வகிக்கிறார். இணை இயக்குனர் நரேஷ் முன்னிலை வகிக்கிறார். நிர்வாக ஆலோசகர் முத்துசாமி, பொறியாளர் ஆலோசகர் சண்முகம், பயிற்சி ஆலோசகர் ஜெயசந்திரன், மாநில உதவி ஒருங்கிணைப்பாளர் சேகர், உதவியாளர் ஜே” வீரமணிகண்டன் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு ஆலோசனையின் பேரில் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஆவுடையப்ப குருக்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செல்வநாயகம், ஆறுமுகராஜன், திட்ட பணியாளர்கள் சங்கர் பாலாஜி, சிவலிங்கம், சாந்தி, அருள்ஜோதி, கண்ணன், மாரி சங்கர், பாப்பு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment