Tuesday, September 10, 2013

டி.ஆர்.பி., தேர்வு: தமிழ் பாட முடிவை வெளியிட தடை


டி.ஆர்.பி., தமிழ் பாடத்திற்கான தேர்வு முடிவை வெளியிட மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. டி.ஆர்.பி., தேர்வு கடந்த ஜூலை 21ம் தேதி நடந்தது. இந்நிலையில், தமிழ் தேர்வில் 47 கேள்விகள் தவறுதலாக இருந்ததாகவும், இதனால் தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் விஜயலட்சுமி என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில்
வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, தமிழ் பாட தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்த ஐகோர்ட், டி.ஆர்.பி., வாரிய தலைவர் வரும் 16ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.

No comments:

Post a Comment