Wednesday, September 11, 2013

வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை : பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும் (வியாழன்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் ஆந்திர கடலோர பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே திட்டமிட்டபடி ப்ளஸ் 2 மற்றும் ப்ளஸ் 1 மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு நடைபெறும் எனவும், திருவள்ளூரில் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கனமழை நீடிக்கும் என்பதால், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment