ஆங்கில வழிக்கல்வி கற்பதில் சிக்கல் - பாடப்புத்தகங்கள் தட்டுப்பாடு
பள்ளி துவங்கி மூன்று மாதங்கள் முடிந்துள்ள நிலையில், அரசு பள்ளிகளுக்கு
இதுவரை ஆங்கில வழி பாடப் புத்தகங்கள் வழங்காததால், ஆறாம் வகுப்பு மாணவர்கள்
கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புத்தகம் இல்லாமல் கல்வி கற்கும் மாணவர்கள் பல சிரமங்களை சந்தித்து
வருகின்றனர். மேலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆங்கில வழி
பாடம் நடத்த போதிய வகுப்பறைகள் ஒதுக்கப்படவில்லை.
போதிய ஆசிரியர்களும் இல்லை.தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகளுக்கு இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்து
வரும் நிலையில், ஆங்கில வழி மாணவர்களுக்கு முதல் பருவபுத்தகங்கள் இதுவரை
வழங்காமல் உள்ளது மாணவர்களின் கல்வியை பாதிக்கும். இதனால் ஆங்கில வழி
பயிலும் மாணவ, மாணவிகள் கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே,
மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழி
பாடப் புத்தகங்களை வழங்கி, போதுமான வகுப்பறை வசதிகளை ஏற்படுத்திக்
கொடுத்து, அதற்கான ஆசிரியர்களையும் நியமிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
No comments:
Post a Comment