Thursday, September 26, 2013

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்க கல்வித்துறை உத்தரவு

தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில் பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமித்து மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 50 நடுநிலைப் பள்ளிகள் சமீபத்தில், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அப்பள்ளிகளில் 50 தலைமை ஆசிரியர்கள், 250 பட்டதாரி ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்.
அது வரை, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமித்து, 9ம் வகுப்பில் மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment