Saturday, September 14, 2013

பார்வையற்றவர்களுக்காக பள்ளிகளில் நிதி வசூலிக்க அனுமதி

தேசிய பார்வையற்றோர் தினத்துக்காக, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நிதி வசூலிக்க, பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.
தேசிய பார்வையற்றோர் சங்கத்தின் தமிழ்நாடு கிளை சார்பில், கொடிகள், உண்டியல் மூலம் பார்வையற்றோருக்காக பள்ளிகளில் நிதி வசூலிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இதையடுத்து, பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் ஆகியோர் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றும், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment