Tuesday, September 17, 2013

பி.எட். இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்

பி.எட். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 17, 18 தேதிகளில் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் 21 கல்லூரிகளில் 13 பாடப் பிரிவுகளின் கீழ் உள்ள 2,118 பி.எட். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி விலிங்டன் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நடத்தி வருகிறது.

முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 30-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதன் முடிவில் 342 இடங்கள் காலியாக உள்ளன.
காலியாக உள்ள இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment