Saturday, September 14, 2013

மாணவர்களின் போலியான விண்ணப்பங்கள் நிராகரிப்பு



விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் மறு தேர்வு எழுத விண்ணப்பித்த 10ஆம் வகுப்பு மாணவர்கள் 692 பேரின் விண்ணப்பங்கள் போலியானது என நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.


கடலூர் மாவட்டத்தில் கடலூர் கல்வி மாவட்டம், விருத்தாசலம் கல்வி மாவட்டம் என 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 10ஆம் வகுப்புக்கு மறு தேர்வு எழுத ஆன்லைன் மூலம் 2,300 பேர் விண்ணப்பித்ததில் 692 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதில் 90 சதவீத மாணவர்கள் போலியான முகவரி மற்றும் மதிப்பெண் நகல்கள் கொடுத்ததால் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேபோல் 12ஆம் வகுப்புத் தேர்வுக்கு 2,392 பேர் விண்ணப்பித்ததில், ஆயிரத்து 581 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நிராகரிக்கப்பட்ட மனுக்களில் பெரும்பாலும் போலியான முகவரி அளிக்கப்பட்டவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment