பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், வினாத்தாளில் கறுப்பு, நீல மை பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Pages
Labels
- SSLC $ HSC
- TNPSC
- TRB
- TET
- COURT NEWS
- SSA
- EDUCATION DEPT
- CBSE
- RESULTS
- DEE PROCEEDINGS
- B.T. TEACHERS
- DSE PROCEEDINGS
- PROCEEDINGS
- B.ED
- S.G TEACHERS
- BRC TRAINING
- PALLI KALVI
- NMMS
- NEW G.Os
- CPS
- D. A NEWS
- CTET
- D.T.ED
- TN SCHEMES
- SYLLABUS
- TALENT EXAM
- TRIMESTER
- ANDROID APP
- DEPARTMENTAL EXAM
- G.P.F
- IGNOU
- M.ED
- PAY COMMISSION
- RMSA
Monday, February 16, 2015
பயன்பாட்டில் இல்லாமல் போன கல்வித்துறை இணையதளம்
அரசு பள்ளிகளை மேம்படுத்த, கோவை மாவட்ட கல்வித்துறையால் துவங்கப்பட்ட, பிரத்யேக இணையதளம், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கட்டணம் செலுத்தி, பராமரிக்க தவறியதால், பயன்பாட்டில் இல்லாமல் போனது.
இன்னும் ஒரு வாரத்தில் குரூப் - 2 தேர்வு முடிவுகள்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர்
குரூப் - 2 தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி.,யின் தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
Thursday, February 12, 2015
மாநில பட்ஜெட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் 50 ஆயிரம் ஆசிரியர்கள்
பணி நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கும் அரசாணை தொடர்பான
அறிவிப்பு, மாநில பட்ஜெட்டில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில், 50 ஆயிரம்
ஆசிரியர்கள் காத்துள்ளனர்.
சட்டக் கல்லூரிகளுக்கு பிப். 18 வரை விடுமுறை நீட்டிப்பு
சென்னை, மதுரை சட்டக்கல்லூரிகளின் விடுமுறையை பிப்ரவரி 18ம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக வீடுமுறை
நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, February 11, 2015
கல்வி வளர்ச்சி நாள் பரிசாக பள்ளிகளுக்கு 80 லட்ச ரூபாய் ஒதுக்கீடு
கல்வி வளர்ச்சி நாள் பரிசாக, பள்ளிகளுக்கு 80 லட்சம் ரூபாய்
ஒதுக்கப்பட்டுள்ளது. காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15, கல்வி வளர்ச்சி நாளாக,
பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. இதற்காக, 80 லட்சம் ரூபாயை தமிழக அரசு
ஒதுக்கியுள்ளது. தேர்வு செய்யப்படும் சிறந்த பள்ளிகளுக்கு, இத்தொகை பரிசு
தொகையாக பகிர்ந்தளிக்கப்படும்.
வீணாகி வருகின்றன ஆங்கிலம் கற்பித்தலுக்காக பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட குறுந்தகடுகள்!
ஆங்கில பாடத்தை புதிய முறையில் பயிற்றுவிப்பதற்காக, ஒவ்வொரு
பள்ளிக்கும், ஒரு குறுந்தகடு வீதம் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், டிவிடி
பிளேயர் மற்றும் கணினி உபகரணங்கள் பழுதடைந்துள்ளதால், குறுந்தகட்டை
பயன்படுத்த முடியாமல், அவை வீணாகி வருகின்றன.
ஆன்லைன் சேர்க்கையைத் துவக்கிய சென்னை சி.பி.எஸ்.இ. பள்ளிகள்
சென்னை நகரிலுள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஆன்லைன் முறையிலான மாணவர் சேர்க்கையைத் துவங்கியுள்ளன.
சென்னை நகரிலுள்ள எஸ்.பி.ஏ.ஓ பள்ளி மற்றும் ஜுனியர் காலேஜ், பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளிலுள்ள சின்மயா வித்யாலயா பள்ளிகள் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி போன்ற பள்ளிகள் அவற்றுள் முக்கியமானவை. இப்பள்ளிகளில் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன மற்றும் அவை இரண்டு நாட்களுக்கு திறந்திருக்கும்.
சென்னை நகரிலுள்ள எஸ்.பி.ஏ.ஓ பள்ளி மற்றும் ஜுனியர் காலேஜ், பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளிலுள்ள சின்மயா வித்யாலயா பள்ளிகள் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி போன்ற பள்ளிகள் அவற்றுள் முக்கியமானவை. இப்பள்ளிகளில் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன மற்றும் அவை இரண்டு நாட்களுக்கு திறந்திருக்கும்.
7.6௦ லட்சம் பள்ளி மற்றும் அங்கன்வாடி மாணவர்களுக்கு குடல்புழு நீக்க மருந்து
கோவை மாவட்டத்தில், சுகாதாரத்துறை சார்பில், 7.6௦ லட்சம் பள்ளி மற்றும்
அங்கன்வாடி மாணவர்களுக்கு குடல்புழு நீக்க மருந்து இன்று
வினியோகிக்கப்படவுள்ளதாக, துணை இயக்குனர் சோமசுந்தரம் தெரிவித்தார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்கள் தைக்கும் பணி
பரமக்குடி கீழமுஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்கள் தைக்கும் பணி துவங்கியது.
மாநிலம் முழுவதும் மார்ச் 5 ல், பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் துவங்கவுள்ளது.
மாநிலம் முழுவதும் மார்ச் 5 ல், பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் துவங்கவுள்ளது.
பிரதமரின் ரேடியோ உரையில் மாணவர்களின் தேர்வு தொடர்பான விஷயங்கள்
பிரதமர் நரேந்திர மோடியின், இம்மாத ரேடியோ உரையில், மாணவர்களின் தேர்வு தொடர்பான விஷயங்கள் இடம் பெறும் என, தகவல் வெளியாகியுள்ளது.
Saturday, February 7, 2015
வகுப்பு கட் அடித்து சினிமாவுக்கு சென்ற 17 மாணவர்கள் சஸ்பெண்ட்
திருப்பூரில், வகுப்புக்கு கட் அடித்துவிட்டு, படம் பார்க்கச் சென்ற பள்ளி மாணவர்கள் 17 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
டி.ஆர்.பி. சார்பில் தேர்வர்கள் வசதிக்காக நிரந்தர தகவல் மையம்!
ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில், தேர்வர்கள் வசதிக்காக, நிரந்தர தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.
"வாசிப்புத்திறன் மேம்பட, வீட்டிலும் பெற்றோர்கள் பயிற்சியளிக்க வேண்டும்"
மாணவர்களுக்கு வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள் தவிர, அவர்களின்
வாசிப்பு திறன் மேம்பட அவர்களுக்கு, வீட்டிலும் பெற்றோர்கள் பயிற்சியளிக்க
வேண்டும் என அறிவுரை கூறப்பட்டது.
புரஜக்டர் மூலம் ஆங்கிலம் கற்பிக்கும் முறை குறித்து ஆய்வு
செங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மாநில குழுவினர் ஆய்வு செய்தனர்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு
கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி
பணியிடங்களுக்கான தேர்வுகள் முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம்
வெளியிட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் படங்களை பதிவேற்றும் மாணவிகளே, உஷார்...!
சமூக வலைதளங்களில், படத்தை பதிவு செய்துள்ள பெண்கள், வக்கிர எண்ணம்
கொண்ட நபர்களால், துன்புறுத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க, படங்களை, வலைப் பதிவேற்றம் செய்யாமல்
இருப்பதே நல்லது என்கின்றனர், போலீசார்.
தற்போது அதிகளவிலான பள்ளி மற்றும்
கல்லூரி மாணவிகள், சமூக வலைதளங்களில் இணைந்திருக்கின்றனர். அவர்களில்,
மிகப் பெரும்பாலானோர், தங்களின் புகைப்படங்களையும் பதிவேற்றம்
செய்துள்ளனர்.
துவங்கியது பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு
பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான, செய்முறைத் தேர்வு நேற்று துவங்கியது.
தேர்வின்போது காலணிகள் அணியக்கூடாது என்ற உத்தரவில் நீலகிரிக்கு விலக்கு அளிக்கப்படுமா?
நீலகிரியில் பனிக்காலம் நீடிக்கும் என்பதால், பொதுத்தேர்வு அறைகளில்,
மாணவ, மாணவியர் காலணிகளை கழட்டி விட்டுச் செல்ல வேண்டும் என்ற உத்தரவில்
இருந்து, நீலகிரிக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை
எழுந்துள்ளது.
மது போதையில் மயங்கிக் கிடந்த கரூர் பள்ளி மாணவனுக்கு கவுன்சிலிங்
மது போதையில் மயங்கிக் கிடந்த கரூர் பள்ளி மாணவனுக்கு, மாவட்ட கல்வி
அலுவலர் தலைமையிலான குழு கவுன்சிலிங் வழங்கி, வேறு பள்ளியில் சேர்க்க
அறிவுறுத்தி உள்ளது.
Tuesday, February 3, 2015
6 முதல் 10ம் வகுப்பு வரை வீடியோவில் அறிவியல் பாடம்
பள்ளிக் கல்வி இணைய தளத்தில் இருந்தே பாடங்களை பார்த்தும்,
படித்தும்தெரிந்துகொள்ள வசதியாக வீடியோ முறைப்பாடங்களை பதிவு செய்ய பள்ளிக்
கல்வித்துறைமுடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக,
6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அறிவியல் பாடங்களை வீடியோவாக தயாரிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அறிவியல் பாடங்களை வீடியோவாக தயாரிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க 8 வார கால அவகாசம் ,சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கோரி
SSTA சார்பாக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது வழக்கு
எண் WP-4420/2014 . வழக்கு கடந்த விசாரணையின் போது பதில் தாக்கல் செய்ய
அரசுக்கு பல முறை அவகாசம் அளிக்கப்பட்டது. நீதிபதி அவர்கள் direction
கொடுக்கலாமா என கேட்டபோது நீதிமன்றத்திற்குள்ளாகவே இறுதி தீர்வு வேண்டுமென
SSTA சார்பாக கடந்த முறை (டிசம்பர் மாதம்)வேண்டப்பட்டது.
நீதி போதனை குறித்த பாடம் பள்ளிகளில் கட்டாயமாகிறதா?
பள்ளிகளில், நீதி போதனையை கட்டாய பாடமாக்குவது
குறித்து, சி.பி.எஸ்.இ., மற்றும் மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் விளக்கம்
கேட்டுள்ளது. சந்தோஷ் சிங் என்ற வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
செய்த மனு: தற்போது, இளைஞர்களிடையே நல் ஒழுக்கம் குறைந்து வருகிறது.
பெண்களுக்கு
ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு, சமையல் எரிவாயுவுக்கு வழங்கும் மானியத்தை, 'கட்' செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இம்மாத
இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ள, மத்திய பட்ஜெட்டில் வெளியாகிறது. மத்திய
அரசானது, சமையல் எரிவாயு வினியோகம் உட்பட, பல திட்டங்களுக்கு மானியம்
வழங்கி வருகிறது. இந்த மானியத்தை படிப்படியாகக் குறைத்து, அதற்காக
ஒதுக்கப்படும் நிதியை, வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிட வேண்டும் என,
விரும்புகிறது; அதற்கான நடவடிக்கைகளை படிப்படியாக துவக்கி உள்ளது.
பணியாளர்கள் நியமனத்தில் காலதாமதம்: அரசு பள்ளிகளில் கணினிகள் வீணடிப்பு
அரசு உயர்நிலை பள்ளிகளில் கணினி இருந்தும்,
அதற்கான பணியாளர்கள் நியமிக்கப்படாததால் பணிகள் பாதிப்படைந்து உள்ளன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு
உட்பட்ட பகுதிகளில், 300க்கும் அதிகமான அரசு உயர்நிலை பள்ளிகள் இயங்கி
வருகின்றன. அவற்றில், 150 பள்ளி களில் மட்டும்தான், தகவல் தொடர்பு
வசதிக்காக கணினிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் தேர்வுத்துறை இயக்குனர் ஆலோசனை
மதுரையில் ஐந்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொது தேர்வுகள் குறித்து மதுரை, திண்டுக்கல், தேனி,ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட முதன்மைமற்றும் கல்வி அலுவலர்கள்,தேர்வுத்துறை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள், தலைமையாசிரியர்கள், வினாத்தாள் காப்பாளர்களுடன் ஆலோசனை நடந்தது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொது தேர்வுகள் குறித்து மதுரை, திண்டுக்கல், தேனி,ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட முதன்மைமற்றும் கல்வி அலுவலர்கள்,தேர்வுத்துறை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள், தலைமையாசிரியர்கள், வினாத்தாள் காப்பாளர்களுடன் ஆலோசனை நடந்தது.
4 மாதங்களில் மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உத்தரவு
’சென்னை மாநகராட்சி பள்ளிகள் அனைத்திலும், நான்கு மாதங்களில், அடிப்படை
வசதிகளை நிறைவேற்ற வேண்டும்’ என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Sunday, February 1, 2015
மாணவர்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு - தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு
பள்ளி மாணவர்களிடம் டெங்கு நோய் குறித்து,
விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவியதையடுத்து, நோய்
தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. மாணவர்கள்
மத்தியில் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
927 ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் காலி
தமிழக பள்ளிகளில், காலியாக உள்ள, ஓவிய ஆசிரியர்
பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசு
பள்ளியில், கல்வி பயிலும் மாணவர்களின், கலை மற்றும் கற்பனை திறனை
ஊக்கப்படுத்த, ஓவியம், இசை, தையல், எம்ப்ராய்டரி, கலைநுட்பம் சார்ந்த
பாடப்பிரிவுகள், தமிழக பள்ளிகளில் துவக்கப்பட்டன.
பிளஸ் 2 தேர்வுக்கு பிப்., 5 முதல் 7 வரை தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை
பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள்,
பிப்., 5 முதல் 7ம் தேதி வரை, தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்
என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை
இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மார்ச் 2015ல், பிளஸ் 2
தேர்வு எழுத, தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில், ஆன்லைனில்
விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டமான தத்கல்
திட்டத்தின் கீழ், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் தினமும் நாளிதழ்!
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்புத்
திறனை மேம்படுத்தும் நோக்கில், தினமும் நாளிதழ் வாங்குவதன் அவசியம்
குறித்து தலைமை ஆசிரியர்களிடம் வலியுறுத்தப்படும் என, கல்வித்துறை
அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மனித வள மேம்பாட்டு அமைச்சக குழுவினர் திடீர் ஆய்வு
உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மனித வள மேம்பாட்டு அமைச்சக குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர்.
பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் தலைமையில் போராட்டம்
ஆசிரியை தமிழ்மலர். இவர் கடந்த வாரம் 3 நாள் தற்செயல் விடுப்பு எடுத்தார்.
விடுப்பு மறுக்கப்பட்டநிலையில், 2 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு
அவரது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருந்தது.
Thursday, January 29, 2015
கல்வித்துறை நடவடிக்கைக்கு பட்டதாரிஆசிரியர்கள் எதிர்ப்பு.
பத்தாம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சிக்காக கல்வித்துறை அதிகாரிகளின் நெருக்கடிக்கு ஆளாவதாக பட்டதாரி ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
அரசு பொதுத்தேர்வில் 10 ம் வகுப்பு மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி அடைய
செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
50 காலிப்பணியிடங்களை கொண்ட குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வரும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
கிராம நிர்வாக அலுவலர்
2,234 காலிப்பணியிடங்களுக்கான கிராம நிர்வாக
அலுவலர் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை 7 லட்சத்து 63
ஆயிரத்து 880 பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த டிசம்பர் 15-ந்தேதி
வெளியிடப்பட்டது.
ஆசிரியர்களுக்கு நடக்கும் பயிற்சிகளில் பயனில்லை, வீணாகிறது நிதி: புகார்
ஆசிரியர்களின் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பதில் தாமதம்
மதுரை தொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர்களின் பதவி உயர்வு முன்னுரிமை
பட்டியல் தயாரிப்பு பணியில் தாமதம் ஏற்படுவதால் பொது ’கவுன்சிலிங்’கின்
போது சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார் எழுந்துள்ளது.
Wednesday, January 28, 2015
பெண் குழந்தைகளுக்காக அஞ்சல் துறையில் மத்திய அரசு தொடங்குகிறது புதிய சேமிப்பு திட்டம் சுகன்யா சம்ரிதி அக்கௌன்ட் ( SSA ) - 22.01.2015 முதல் அமுலாகிறது.
1) 10 வயது வரை உள்ள இரண்டு பெண் குழந்தைகளுக்காக இந்த கணக்கு தொடங்கலாம்
2)குறைந்தபட்ச முதலிடு ரூபாய் 1000
3).ஒவ்வொரு நிதி ஆண்டிலும் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை சேமிக்கலாம்.
4.)குழந்தையின் 21 வது வயதில் கணக்கை முடிக்கலாம்
5. )Nomination வசதி கிடையாது .
6.)ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூபாய் 1000 கண்டிப்பாக முதலிடு செய்ய வேண்டும்
7)இந்த ஆண்டு வட்டி 9 .1%.
ஆசிரியர் பணியிடம் உருவாக்கக் கோரி சிறப்பு கல்வியியல் பட்டதாரிகள்(Special B.Ed) ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு.
சிறப்பு கல்வியியல் பட்டதாரி சங்கத்தின்
மாநிலத் தலைவர் பி.வடிவேல் முருகன் கூறியதாவது: தமிழகத்தில் பார்வையற்ற,
காது கேட்கும் திறனற்ற மற்றும் மூளை வளர்ச்சி திறன் குன்றிய மாணவ-
மாணவிகளுக்குக் கற்பிக்கும் சிறப்பு கல்வியியல் (பி.எட்) பட்டம்
பெற்றவர்களுக்குப் பார்வையற்றோர் மற்றும் மூளை வளர்ச்சி குன்றியோருக்கான பள்ளி களில் மட்டுமே ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது.
அரசுப் பள்ளிகளுக்கு உள்கட்டமைப்பு நிதி ஒதுக்கீடு
உடுமலை பகுதியிலுள்ள இரண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2 கோடி ரூபாய்
மதிப்பீட்டில், வகுப்பறை மற்றும் ஆய்வகம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு
செய்துள்ளது.
பள்ளிகளில் சுத்தமான கழிவறைகள் இருப்பது அவசியம்: சப்ரீம் கோர்ட் கண்டிப்பு
பள்ளிகளில் சுத்தமான, அனைத்து வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள் இருப்பது அவசியம் என, சுப்ரீம் கோர்ட் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமற்ற முறையிலும், எவ்வித வசதிகளும் இன்றி இருப்பதாக, ஆந்திராவை சேர்ந்த, ராஜூ என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமற்ற முறையிலும், எவ்வித வசதிகளும் இன்றி இருப்பதாக, ஆந்திராவை சேர்ந்த, ராஜூ என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
Tuesday, January 27, 2015
20% கிராமப்புற பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை: ஆய்வு
தமிழகத்தில், கிராமப்புற பகுதிகளில் செயல்படும் 20 சதவீத பள்ளிகளில்,
மாணவ, மாணவிகளுக்கு கழிவறை வசதி இல்லை என்பது ஆய்வின் மூலம்
தெரியவந்துள்ளது.
ஆங்கிலத்தை எளிதாக கற்றுக்கொள்ளும் வகையிலான சிடி-க்கள் தயார்
அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்,
ஆங்கிலத்தை எளிதில் கற்று கொள்வதற்கான திட்டத்தின் கீழ், 43 பாடங்களை கொண்ட
2 சிடி -க்கள் தொடக்கக் கல்வித்துறையால் தயார் செய்யப்பட்டுள்ளன.
பொது கவுன்சிலிங்கின்போது சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார்
மதுரை தொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர்களின் பதவி உயர்வு முன்னுரிமை
பட்டியல் தயாரிப்பு பணியில் தாமதம் ஏற்படுவதால் பொது கவுன்சிலிங்கின் போது
சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மாவட்டத்தில் தொடக்க கல்வித்துறைக்கு உட்பட்ட 15 கல்வி யூனியன்களில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இவர்களுக்கு டிச.31ம் தேதியை அடிப்படை நாளாக கொண்டு ஜன.1ல் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் வெளியிட வேண்டும்.
மாவட்டத்தில் தொடக்க கல்வித்துறைக்கு உட்பட்ட 15 கல்வி யூனியன்களில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இவர்களுக்கு டிச.31ம் தேதியை அடிப்படை நாளாக கொண்டு ஜன.1ல் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் வெளியிட வேண்டும்.
வனக் கல்லூரி மாணவ, மாணவியர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
மேட்டுப்பாளையம் அருகேயுள்ள வனக் கல்லூரியில், மாணவ, மாணவியர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரேஞ்சர், பாரஸ்டர் பணிகளுக்கு முன்னுரிமை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படும் இப்போராட்டத்தில், 63 மாணவியர், 150 மாணவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ரேஞ்சர், பாரஸ்டர் பணிகளுக்கு முன்னுரிமை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படும் இப்போராட்டத்தில், 63 மாணவியர், 150 மாணவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Monday, January 26, 2015
வரும் கல்வியாண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் ரெடி
வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவதற்காக, இலவச
பாடப்புத்தகங்கள் மாவட்டங்களுக்கு வந்துள்ளன. அவற்றை குடோன்களில்
பாதுகாப்பாக வைக்க, முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
‘தமிழகத்தில் 5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை’
தமிழகத்தில் 5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சுமாராக படிக்கும் மாணவர்களை, பள்ளிகளே டுடோரியலில் சேர்க்கும் அவலம்!
10 வகுப்பு பொது
தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
பெற சுமாராக படிக்கும்
மாணவர்களை
வெளியேற்றிவிட்டு, பள்ளி
ஆசிரியர்களே டுடோரியல்
கல்லூரிக்கு பரிந்துரைக்கும்
அவலம் தொடர்கிறது.
இந்தியாவில் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: யுனிசெப்
ஐக்கிய நாடுகள்: பள்ளி
செல்லா குழந்தைகள்
எண்ணிக்கை, தெற்காசிய
நாடுகளில் அதிக அளவில்
வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதில், அதிக முன்னேற்றம்
அடைந்திருப்பது இந்தியா
தான். கடந்த 2000 முதல்
2012 வரையிலான
காலகட்டத்தில், பள்ளி
செல்லா குழந்தைகளில், 1.6
கோடி குழந்தைகள் பள்ளிக்கு
சென்றுள்ளனர்.
டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் பெறுவதில் சிக்கல்
ஆசிரியர் தகுதி தேர்வான டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற பலருக்கு, தேர்ச்சி சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
போராட்டம் நடத்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு
சம்பள முரண்பாடு வழக்கில், தமிழக அரசின் எதிர் மனுவால்
அதிருப்தி அடைந்த, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், போராட்டம் நடத்த
முடிவெடுத்து உள்ளனர்.
Thursday, January 22, 2015
ஓவிய சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவக்கம்; நிதியின்றி பகுதி நேர ஆசிரியர்கள் புறக்கணிப்பு
பற்றாக்குறையின் காரணமாக, இப்பயிற்சி வகுப்பில், பகுதி நேர ஓவிய
ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். கோவை ராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள, மாநகராட்சி பெண்கள் மேல்
நிலைப்பள்ளியில், ஓவிய ஆசிரியர்களுக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்புகள்,
நேற்று துவங்கின.
தவறான கணக்கு காட்டி மாணவர் விடுதியில் முறைகேடு?
மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுதியில் கூடுதல்
மாணவர்கள் தங்கியிருப்பதாக கணக்கு காட்டி அரசு வழங்கும் உணவுப்படியில்
முறைகேடு செய்வதாக புகார் எழுந்துள்ளது.
Wednesday, January 21, 2015
100% தேர்ச்சி இலக்கு - அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அனிமேஷன் பாட டிவிடிகள்.
எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், நுாறு சதவீத
தேர்ச்சிபெறும் வகையில், கல்வித்துறை சார்பில், அனிமேஷன் பாடங்கள் அடங்கிய
டிவிடிகள், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2
பொதுத்தேர்வில், ஒவ்வொரு அரசுப் பள்ளிகளும் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற,
மாநில கல்வித்துறை பல்வேறு வகையில் முயற்சி செய்கின்றது. இதற்காக, பள்ளிக்
கல்வித்துறை, பல்வேறு திட்டங்களையும், புதிய செயல்பாடுகளையும் வகுத்து
வருகிறது.
குரூப் 1 தேர்வு பிரச்சினையில் சுப்ரீம்கோர்ட் புதிய உத்தரவு
கடந்த 2001-ல் டி.என்.பி.எஸ்.சி. குரூப் -1 தேர்வு நடந்தது. வெற்றிபெற்ற 80 பேர் பணி நியமனம் பெற்றனர்.
இதனை எதிர்த்தும், முறைகேடு நடந்ததாகவும், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.
இன்று நடந்த விசாரணையில், விடைத்தாள்களை திருத்தி 2 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் அனில் தவே, தீபக் மிஸ்ரா, யு.பி.எஸ்.சி.யான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்திற்கு உத்தரவிட்டனர்.
இதனை எதிர்த்தும், முறைகேடு நடந்ததாகவும், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.
இன்று நடந்த விசாரணையில், விடைத்தாள்களை திருத்தி 2 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் அனில் தவே, தீபக் மிஸ்ரா, யு.பி.எஸ்.சி.யான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்திற்கு உத்தரவிட்டனர்.
வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
கடந்த டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்ட வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகளின்படி,
தேர்ச்சி பெற்றோர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி
விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 616 ஆசிரியர் பணியிடங்கள் காலி
தமிழகத்தில் உள்ள, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், 616 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என, அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்த விவரங்களை தெரிவிக்கும்படி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழகம் அமைப்பாளர் கோ.ரா.ரவி விண்ணப்பித்தார்.
இதுகுறித்த விவரங்களை தெரிவிக்கும்படி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழகம் அமைப்பாளர் கோ.ரா.ரவி விண்ணப்பித்தார்.
முதுகலை ஆசிரியர்களுக்கான சம்பளம் நிர்ணயித்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
முதுகலை ஆசிரியர்களுக்கான சம்பளம் நிர்ணயித்ததை எதிர்த்து, சென்னை உயர்
நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதிலளிக்க,
அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Monday, January 19, 2015
சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளியில் தமிழ் பாட ஆசிரியர்களுக்கு கிராக்கி.
சி.பி.எஸ்.இ., உட்பட பிறவாரிய பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளில்
தமிழ் ஆசிரியர்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. இது தமிழ் பாடத்தில்,
பட்டம் பெற்றவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயனளிக்காத புதிய பென்ஷன் திட்டம்: ஆசிரியர் குடும்பங்கள் பாதிப்பு
பிப்ரவரி முதல் வாரத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தொடக்கம்
இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5-ஆம்
தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம்
மாணவர்கள் எழுத உள்ளனர்.பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு
இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட
பாடங்களில் செய்முறைத் தேர்வு நடத்தப்படும்.
குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த தமிழக அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் - 1 தேர்வுக்கான
வயது வரம்பை உயர்த்த வேண்டும் என, தமிழக அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
புதிய வகுப்பறை உத்திகளை கையாளக்கூடிய ஆசிரியர்களுக்கு கலெக்டர் அழைப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில், புதிய வகுப்பறை உத்திகளை கையாளக்கூடிய
ஆசிரியர்கள், தங்களின் புதிய உத்திகளை வழங்கலாம் என, ஆட்சியர்
அறிவித்துள்ளார்.
Saturday, January 17, 2015
பள்ளிக் குழந்தைகளுக்கு தனியாக ஆதார் சிறப்பு முகாம் நடத்தி விபரங்களை சேகரிக்க உத்தரவு
பள்ளிக் குழந்தைகளுக்கு என்று தனியாக ஆதார் சிறப்பு முகாம் நடத்தி,
இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தில், மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என,
மாநில திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
Thursday, January 15, 2015
பிளஸ் 2 செய்முறைத் தேர்விற்கான தேர்வு மையங்கள் அமைக்க தீவிர நடவடிக்கை
பிளஸ் - 2 செய்முறைத் தேர்விற்கான தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து, பள்ளி தலைமையாசிரியர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பிளஸ் - 2 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள், பிப்., மாதம் துவங்க உள்ள நிலையில், தேர்வு மையங்கள் அமைப்பது, செய்முறைத்தேர்வு ஆசிரியர்கள், இணை மையங்கள், மாணவர்கள் பாடவாரியாக மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விபரங்களை உடனடியாக அனுப்புவதற்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் - 2 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள், பிப்., மாதம் துவங்க உள்ள நிலையில், தேர்வு மையங்கள் அமைப்பது, செய்முறைத்தேர்வு ஆசிரியர்கள், இணை மையங்கள், மாணவர்கள் பாடவாரியாக மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விபரங்களை உடனடியாக அனுப்புவதற்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களின் அரையாண்டு தேர்வு முடிவுகள் குறித்து ஆய்வு கூட்டம்
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும்
மாணவர்களின் அரையாண்டு தேர்வு முடிவுகள் குறித்து, கோவை மாவட்ட முதன்மை
கல்வி அதிகாரி ஞானகவுரி தலைமையில், ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: கல்வித்துறை கண்டிப்பு
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு
வகுப்புகள் நடத்தக்கூடாது என, தலைமை ஆசிரியர்களை, கல்வித்துறை
கண்டித்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் பூட்டப்பட்டுள்ள கழிவறைகள்: அதிகாரிகள் அதிர்ச்சி
தமிழகத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளதால், கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு, தனியார் பள்ளிகள் அனைத்திலும் கழிப்பறை வசதி ஏற்படுத்த, அரக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. கலெக்டர்கள் மூலம் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசு, தனியார் பள்ளிகள் அனைத்திலும் கழிப்பறை வசதி ஏற்படுத்த, அரக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. கலெக்டர்கள் மூலம் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
குரூப் 2 ஏ கலந்தாய்வு - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
குரூப் - 2 ஏ கலந்தாய்வில், காலியிடங்களை ஆய்வுசெய்து, இடம் இருப்பின்,
விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் -
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
Monday, January 12, 2015
"தீவிரவாதத்திற்கும், அடிப்படைவாதத்திற்கும் திருக்குறள் நல்ல தீர்வாக அமையும்"
தீவிரவாதத்திற்கும், அடிப்படைவாதத்திற்கும் திருக்குறள் நல்ல தீர்வாக
அமையும்" என்று கன்னியாகுமரியில், திருக்குறள் திருப்பயணத்தை தொடங்கிய
தருண்விஜய் எம்.பி.,கூறினார்.
தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம் குறித்த பயிற்சி
திருக்கோவிலூரில் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம் குறித்த பயிற்சி நடந்தது.
Sunday, January 11, 2015
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும் எனவும், TRB விடை குறிப்புகள் பொங்கலுக்குப் பிறகு வெளியிடப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும்என
ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 1,807 முதுநிலைப் பட்டதாரி
ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும்
சனிக்கிழமை நடைபெற்றது.
PGTRB : பிப்ரவரியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு
டி.ஆர்.பி. தேர்வுக்கு விண்ணப்பித்தோரில் 94.41% பேர் தேர்வெழுதினர்
ஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி., நடத்திய, முதுநிலை பட்டதாரி
ஆசிரியர்களுக்கான தேர்வில், 11,291 பேர் பங்கேற்கவில்லை. 94.41 சதவீதம்
பேர் தேர்வு எழுதி உள்ளனர்.
Saturday, January 10, 2015
PGTRB - செல்போன், மின்னணு கைக்கடிகாரம் கொண்டு வர தடை சென்னை கலெக்டர் உத்தரவு
சென்னை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும்
முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்து தேர்வினை சென்னை மாவட்டத்தில் 15
ஆயிரத்து 49 தேர்வர்கள் 34 மையங்களில் எழுத உள்ளனர். தேர்வு மையங்களில்
தேவையான அடிப்படை வசதிகளும், மாநகர போக்குவரத்து கழகத்தினால் தேர்வு
மையங்களுக்கு செல்வதற்கேற்ப பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இன்று நடக்கிறது 1,868 காலிப்பணியிடங்களுக்கான முதுநிலை பட்டதாரி போட்டி தேர்வு
தமிழகம் முழுவதும் 2 லட்சம் பேர் பங்கேற்கும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
போட்டித் தேர்வு சனிக்கிழமை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 499 தேர்வு
மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆசிரியர் தகுதித் தேர்வின்போது போலி
வினாத்தாள்கள் விற்பனை செய்யப்பட்ட தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்
இந்தத் தேர்வுக்காகக் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தொலைநோக்குத் திட்ட இலக்கை 5 ஆண்டுகளில் கல்வித் துறை எட்டும்: அமைச்சர் கே.சி.வீரமணி
நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் மலர உருவாக்கப்பட்ட 2,023
தொலைநோக்குத் திட்ட இலக்கை இன்னும் 5 ஆண்டுகளுக்குள் பள்ளிக் கல்வித் துறை
எட்டிவிடும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி நம்பிக்கை
தெரிவித்தார்.
வேலூரை அடுத்த மெட்டுக்குளத்தில், தனியார் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான மாணவர் தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி அமைச்சர் பேசியது:
வேலூரை அடுத்த மெட்டுக்குளத்தில், தனியார் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான மாணவர் தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி அமைச்சர் பேசியது:
Friday, January 9, 2015
பிப்ரவரி 22ம் தேதி மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு(CTET) பிப்ரவரி 22ம் தேதி நடைபெறவுள்ளது.
Shortlist செய்யப்பட்ட நபர்களுக்காக CBSE அமைப்பு இத்தேர்வை நடத்துகிறது.
1 முதல் 5ம் வகுப்பு வரை பாடமெடுக்கும் ஆசிரியர்கள், முதல் தாள்(paper - 1) தேர்வையும், 5 முதல் 8ம் வகுப்பு வரை பாடமெடுக்கும் ஆசிரியர்கள் இரண்டாம் தாளையும்(paper - 2) எழுத வேண்டும்.
Shortlist செய்யப்பட்ட நபர்களுக்காக CBSE அமைப்பு இத்தேர்வை நடத்துகிறது.
1 முதல் 5ம் வகுப்பு வரை பாடமெடுக்கும் ஆசிரியர்கள், முதல் தாள்(paper - 1) தேர்வையும், 5 முதல் 8ம் வகுப்பு வரை பாடமெடுக்கும் ஆசிரியர்கள் இரண்டாம் தாளையும்(paper - 2) எழுத வேண்டும்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 2.02 லட்சம் பேர் பங்கேற்பு
நாளை(ஜனவரி 10) நடக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், 2.02
லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக
உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும், மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 1,807 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதற்கான தேர்வை எழுத, லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு, நாளை அனைத்து மாவட்டங்களிலும் நடக்கிறது.
தமிழகம் முழுவதும், மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 1,807 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதற்கான தேர்வை எழுத, லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு, நாளை அனைத்து மாவட்டங்களிலும் நடக்கிறது.
Thursday, January 8, 2015
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் திருவள்ளுவர் கட்டுரைப் போட்டி
நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில்,
இணையம் மூலம் திருவள்ளுவர் கட்டுரைப் போட்டி நடத்தப்படும் என, மத்திய
மனிதவள துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு ‘ஹால் டிக்கெட்’ எப்போது?
’பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், ஹால்
டிக்கெட்களை, பிப்., 2 முதல் 4ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’
என, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்து உள்ளார்.
மாநகராட்சி பள்ளி மாணவர்கள் நவீன தொழில்நுட்ப அறிவைப் பெறும் திட்டம்
மாநகராட்சி பள்ளி மாணவர்களின் தரத்தை உயர்த்தவும், கல்வி அறிவோடு,
தொழில்நுட்ப அறிவை பெருக்கவும், மாநகராட்சி கல்வித்துறை மற்றும்
’அமெரிக்கன் பவுண்டேஷன்’, ’டெல்’ நிறுவனம் இணைந்து, ’மாநகராட்சியின்
கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒருங்கிணைந்த வகுப்பறைகள்’
திட்டத்தை விரைவில் துவங்க உள்ளன.
இலவச சீருடை திட்டம் பிளஸ் 2 வரை விரிவுபடுத்தப்படுமா?
பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடை திட்டத்தை, மாணவர்களின் நலன் கருதி,
பிளஸ் 2 வகுப்பு வரை விரிவுபடுத்த, அரசு மற்றும் கல்வி அதிகாரிகள் கொண்ட
குழு, ஆலோசித்து வருகிறது.
டி.ஆர்.பி., தேர்வு பணிகள் புறக்கணிப்பு; முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அறிவிப்பு
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் ஜன., 10ல்
நடக்கும் முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுப் பணிகளை
புறக்கணிப்பதாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
மாணவியர் பாதுகாப்பிற்கான வழிமுறைகள்; வகுத்தது பள்ளிக்கல்வித் துறை
’மாணவியர் தனியாக செல்வதையும்; பேருந்து நிறுத்தங்களில் தனியாக
நிற்பதையும் அறவே தவிர்க்க வேண்டும்; குழுவாக செல்ல, தலைமை ஆசிரியர்கள்
ஏற்பாடு செய்ய வேண்டும்’ என, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் அனைத்து
பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
Wednesday, January 7, 2015
அரசு ஊழியர்களுக்கு கம்ப்யூட்டர் அறிவு கட்டாயம்: 50 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு உத்தரவு
பெங்களூரு:
'அரசுத் துறைகளில், 50 வயதிற்கு உட்பட்ட, 'சி' பிரிவு ஊழியர்கள் அனைவரும்,
கம்ப்யூட்டர் கல்வி கற்பது அவசியம்' என, கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசு
நிர்வாகத்திலுள்ள துறைகள், கம்ப்யூட்டர் மயமாகி வருகின்றன. இதனால், 'சி'
குரூப் ஊழியர்களில், 50 வயதுக்குட்பட்டவர்கள், கண்டிப்பாக கம்ப்யூட்டர்
கல்வி கற்க வேண்டும் என, கடந்த 2ம் தேதி, அரசு உத்தரவிட்டு உள்ளது.
Subscribe to:
Posts (Atom)