Showing posts with label SSLC $ HSC. Show all posts
Showing posts with label SSLC $ HSC. Show all posts

Monday, February 16, 2015

வினாத்தாளில் கறுப்பு, நீல மை பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்: தேர்வுத்துறை

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், வினாத்தாளில் கறுப்பு, நீல மை பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Wednesday, February 11, 2015

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்கள் தைக்கும் பணி

பரமக்குடி கீழமுஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்கள் தைக்கும் பணி துவங்கியது.
மாநிலம் முழுவதும் மார்ச் 5 ல், பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் துவங்கவுள்ளது.

Saturday, February 7, 2015

துவங்கியது பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு

பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான, செய்முறைத் தேர்வு நேற்று துவங்கியது.

Tuesday, February 3, 2015

மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் தேர்வுத்துறை இயக்குனர் ஆலோசனை

மதுரையில் ஐந்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொது தேர்வுகள் குறித்து மதுரை, திண்டுக்கல், தேனி,ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட முதன்மைமற்றும் கல்வி அலுவலர்கள்,தேர்வுத்துறை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள், தலைமையாசிரியர்கள், வினாத்தாள் காப்பாளர்களுடன் ஆலோசனை நடந்தது.

Sunday, February 1, 2015

பிளஸ் 2 தேர்வுக்கு பிப்., 5 முதல் 7 வரை தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை

பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள், பிப்., 5 முதல் 7ம் தேதி வரை, தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மார்ச் 2015ல், பிளஸ் 2 தேர்வு எழுத, தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில், ஆன்லைனில் விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டமான தத்கல் திட்டத்தின் கீழ், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Monday, January 26, 2015

வரும் கல்வியாண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் ரெடி

வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவதற்காக, இலவச பாடப்புத்தகங்கள் மாவட்டங்களுக்கு வந்துள்ளன. அவற்றை குடோன்களில் பாதுகாப்பாக வைக்க, முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Wednesday, January 21, 2015

100% தேர்ச்சி இலக்கு - அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அனிமேஷன் பாட டிவிடிகள்.

எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சிபெறும் வகையில், கல்வித்துறை சார்பில், அனிமேஷன் பாடங்கள் அடங்கிய டிவிடிகள், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
             தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஒவ்வொரு அரசுப் பள்ளிகளும் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற, மாநில கல்வித்துறை பல்வேறு வகையில் முயற்சி செய்கின்றது. இதற்காக, பள்ளிக் கல்வித்துறை, பல்வேறு திட்டங்களையும், புதிய செயல்பாடுகளையும் வகுத்து வருகிறது.

Monday, January 19, 2015

பிளஸ் 2 தேர்வு: நிகழாண்டு கூடுதலாக 50 மையங்

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக இந்த ஆண்டு கூடுதலாக 50-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதையடுத்து, மாநிலம் முழுவதும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 2,300 ஆக அதிகரிக்க உள்ளது.

பிப்ரவரி முதல் வாரத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தொடக்கம்

இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் செய்முறைத் தேர்வு நடத்தப்படும்.

Thursday, January 8, 2015

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற வழிமுறைகள் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்று அதற்கான வழிமுறைகளை தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு ‘ஹால் டிக்கெட்’ எப்போது?

’பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், ஹால் டிக்கெட்களை, பிப்., 2 முதல் 4ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்து உள்ளார்.

இலவச சீருடை திட்டம் பிளஸ் 2 வரை விரிவுபடுத்தப்படுமா?

பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடை திட்டத்தை, மாணவர்களின் நலன் கருதி, பிளஸ் 2 வகுப்பு வரை விரிவுபடுத்த, அரசு மற்றும் கல்வி அதிகாரிகள் கொண்ட குழு, ஆலோசித்து வருகிறது.

Wednesday, January 7, 2015

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் அமலாகுமா? அரசு ஒப்புதல் அளிக்காததால் குழப்பம்

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டத்திற்கு அரசு இன்னும் ஒப்புதல் அளிக்காததால், வரும் கல்வி ஆண்டில் எந்த பாடத்திட்டம் பின்பற்றப்படும் என்ற குழப்பம், மாணவர் களிடம் ஏற்பட்டு உள்ளது.

      

Wednesday, December 17, 2014

ஆன்சர் கீ தயாரிக்கப்பட்டு விடைத்தாள் திருத்தப்படும்: முதன்மை கல்வி அலுவலர்

"மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 அரையாண்டு தேர்வுக்கான சிறப்பு ஆன்சர் கீ தயாரிக்கப்பட்டு, அதன்படி விடைத்தாள் திருத்தப்படும்" என முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தெரிவித்தார்.

Sunday, December 14, 2014

10ம் வகுப்பு அரையாண்டு தேர்வு தமிழ் வினாத்தாளில் குளறுபடி: ‘புளூ பிரின்ட்’படி வினாக்கள் இல்லை

தமிழகத்தில் 10-ம் வகுப்பு அரையாண்டு தேர்வில், தமிழ் முதல் தாள் வினாத் தாளில், ‘புளூ பிரின்ட்’படி நெடுவினாக்கள் இடம்பெறவில்லை. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Friday, December 5, 2014

மார்ச் 5ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு; 10ம் வகுப்பு தேர்வு தேதியும் அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 5ம் தேதி துவங்கி, மார்ச் 31ம் தேதி வரை நடக்கிறது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 19ம் தேதி துவங்கி, ஏப்ரல் 10ம் தேதி வரை நடக்கிறது. கடந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வு, மார்ச் 3ம் தேதி துவங்கி, 25ம் தேதி வரையும்; பத்தாம் வகுப்பு தேர்வு, மார்ச், 25ம் தேதி துவங்கி, ஏப்ரல் 9ம் தேதி வரை நடந்தது.

மாணவர்களுக்கு கணித பாடத்திற்கான புத்தாக்க பயிற்சி

விழுப்புரம் நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாடத்திற்கான புத்தாக்க பயிற்சி நடந்தது.
புதுச்சேரி சேலியமேடு வாணிதாசனார் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வீரப்பன், கணிதம் பாடத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதற்கான கருத்துரை வழங்கினார். லயன்ஸ் சங்க மண்டல தலைவர் வடிவேல், பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Sunday, November 9, 2014

தனித்தேர்வு எழுத விரும்புவோர் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

வரும் மார்ச்சில் நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனித் தேர்வாக எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், வரும் 10ம் தேதி முதல் 21ம் தேதி வரை, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Wednesday, November 5, 2014

பிளஸ் 2 துணைத்தேர்வு விடைத்தாள் நகல் கோரியோர் இணையதளத்தில் பதிவிறக்கலாம்: தேர்வுத்துறை

பிளஸ்-2 துணைத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இணையதளம் மூலமாக விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Saturday, November 1, 2014

செய்முறை தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க அலைக்கழிப்பதாக புகார்

பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள், செய்முறை தேர்வுக்காக, ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க, அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.