Showing posts with label NEWS PAPER. Show all posts
Showing posts with label NEWS PAPER. Show all posts

Saturday, December 21, 2013

நிதி பற்றாக்குறையால் மெட்ரிக் பள்ளியை மூட முடிவு: பெற்றோர்கள் அதிர்ச்சி

கோவை கணபதி பகுதியில் உள்ள குமாரசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை வரும் கல்வியாண்டுடன் மூட உள்ளதாக பள்ளி நிர்வாகத்தின் திடீர் அறிவிப்பால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Thursday, December 19, 2013

பள்ளிக்கு யானைகள் "விசிட்": சுற்றுச்சுவர் இல்லாததால் அச்சம்

வால்பாறை அருகே, சுற்றுச்சுவர் இல்லாத துவக்கப்பள்ளிக்கு, யானைகள் அடிக்கடி விசிட் அடிப்பதால், மாணவர்கள் பீதியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறை தாலுகாவில் 43 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளும், 8 நடுநிலைப் பள்ளிகளும், 9 அரசு நிதியுதவி பெறும் துவக்கப் பள்ளிகளும், 2 அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இது தவிர 5 அரசு நலப்பள்ளி, அரசு உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளி உட்பட மொத்தம் 88 பள்ளிகள் செயல்படுகின்றன.

Monday, October 7, 2013

ரூ.15 ஆயிரம்: அரசினால் வழங்கப்பட்ட இலவச "லேப்டாப்" விலை

தமிழக அரசு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வழங்கும் இலவச "லேப்டாப்" வெளிமார்க்கெட்டில் 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.

Monday, September 30, 2013

தமிழக ஆராய்ச்சி மாணவருக்கு "நாசா" ஆய்வு மையம் அழைப்பு

சென்னை அண்ணா பல்கலை ஆராய்ச்சி மாணவரும், கம்பத்தை சேர்ந்தவருமான சலீம்கானுக்கு, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அழைப்பு விடுத்துள்ளது.

நெருங்கும் கேட் தேர்வு - நீங்கள் தயாரா?

இந்தியாவின் 13 ஐ.ஐ.எம்.,களில் மொத்தமுள்ள 3,000 இடங்களில், எப்படியாவது ஒன்றில் இடம்பிடித்துவிட வேண்டும் என்பதே, சி.ஏ.டி., தேர்வை எழுதும் ஒவ்வொரு மாணவரின் ஏக்கமாக இருக்கிறது.
எனவே, அக்டோபர் மாத மத்தியில் தொடங்கும் கேட் தேர்வை, நல்லபடியாக எழுத வேண்டும் என்ற பதைபதைப்பில் தற்போது மாணவர் உலகம் இருக்கிறது.

ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளின் நிலை குறித்து சர்வே

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி ஆரம்பிக்கப்பட்ட பின், பள்ளிகளில் காணப்படும் நிலை குறித்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சர்வே துவக்கியுள்ளது.

Friday, September 27, 2013

மதிய தூக்கம் மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கும்

பகலில் ஒரு மணி நேரம் வரை தூங்கினால், மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பதை, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பள்ளி கட்டண நிர்ணய விசாரணையில் பெற்றோரையும் சேர்க்க பரிசீலனை

தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய விசாரணையில், பெற்றோரையும் பங்கேற்கச் செய்து, அவர்களின் கருத்துகளையும் கேட்க, நடவடிக்கை எடுக்கப்படும், என, கட்டண நிர்ணய குழு தலைவர், சிங்காரவேலு தெரிவித்தார்.

Thursday, September 26, 2013

பள்ளி ஆசிரியர்களுக்கு "விநோத டிரான்ஸ்பர்" உத்தரவு

அரசு கள்ளர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, விநோதமான முறையில் இடமாறுதல் உத்தரவு வழங்கப்படுகிறது.

தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வலியுறுத்தி போராட்டம்

தஞ்சாவூர் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் முன் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தாத தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வலியுறுத்தி நேற்று முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொசுக்களை அழிக்கும் கருவி: பிளஸ் 1 மாணவியர் கண்டுபிடிப்பு

மனித உடலில் இருந்து வெளியேறும் வாசனையை, திரவம் மூலம் உருவாக்கி, கொசுக்களை கவர்ந்திழுத்து அழிக்கும் புதிய கருவியை, தனியார் பள்ளி மாணவியர் கண்டுபிடித்துள்ளனர்.

7வது ஊதியக் குழு அமைக்க ஒப்புதல் : சிதம்பரம் தகவல்

மத்திய அரசின் 7வது ஊதியக் குழுவை அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கோவைக்கு விரைவில் சிவில் சர்வீசஸ் தேர்வு மைய அந்தஸ்து

சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு மையமாக, கோவை விரைவில் அறிவிக்கப்படும்" என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய (ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்) மண்டல இயக்குனர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், கோவையில் நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய பணியாளர் நலன் சீர்திருத்தத்துறை அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:

Tuesday, September 24, 2013

மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க ஆன்லைன் பிரச்சாரம்

மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க "சேவ் மை புக்" என்ற தலைப்பில் ஆன்லைனில் பிரச்சாரம் துவங்க இணையதளம் ஒன்றை துவங்கியுள்ளது.

டி.இ.டி., தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வை உடனடியாக ரத்து செய்து, வேலை வாய்ப்பக முன்னுரிமைப்படி, ஆசிரியர் நியமனங்களை நடத்த வேண்டும் என, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

கூடுதல் கட்டண வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு மாணவர் – பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் மாநில கூட்டம், சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், சங்கத்தின் தலைவர் அருமைநாதன், முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.