Saturday, April 5, 2014

குரூப்-2: ஏப்ரல் 7ம் தேதி 2ம் கட்ட கலந்தாய்வு

குரூப்-2 இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 7ம் தேதி, அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.,) அலுவலகத்தில் நடக்கிறது.

இதுதொடர்பாக தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு: கலந்தாய்வில் பங்கேற்க, தகுதி வாய்ந்த, 256 விண்ணப்பதாரரின் பதிவு எண்கள், தேர்வாணைய இணையதளத் தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன.
தபால் மூலமும் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள், உரிய கல்வி சான்றுகளுடன், 7ம் தேதி காலை, 8:30 மணிக்கு சென்னை பாரிமுனையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்.

No comments:

Post a Comment