Saturday, December 28, 2013

பட்டதாரி ஆசிரியருக்கு பதவி உயர்வு கவுன்சிலிங்

பட்டதாரி ஆசிரியர், 961 பேருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கவுன்சிலிங் நாளை 32 மாவட்டங்களிலும் நடக்கிறது. ஜன., 1ம் தேதி முதல் முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியருக்கு இந்த கவுன்சிலிங் நடக்கிறது.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், ஆன்-லைன் வழியில் நடக்கும் இந்நிகழ்ச்சியில், சம்பந்தப்பட்ட ஆசிரியர், அந்தந்த மாவட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்றும், நாளையே பதவி உயர்வுக்கான உத்தரவுகள் வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment