Thursday, December 19, 2013

பி.எட். தேர்வு: மாநில அளவில் திருவண்ணாமலை மாணவர் சிறப்பிடம்

திருவண்ணாமலை விக்னேஷ் கல்வியியல் கல்லூரி மாணவர், பி.எட். தேர்வில் மாநில அளவில் 7-ம் இடம் பிடித்துள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அண்மையில் பி.எட். தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியரின் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில் திருவண்ணாமலை விக்னேஷ் கல்வியியல் கல்லூரி மாணவர் எம்.பிரபு, மாநில அளவில் 7-வது இடம் பிடித்துள்ளார்.

இத்துடன் வேலூர் மண்டல அளவிலும், திருவண்ணாமலை மாவட்ட அளவிலும் மாணவர் பிரபு முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சிறப்பிடம் பிடித்த மாணவருக்கு அண்மையில் நடைபெற்ற விழாவில், தமிழக ஆளுநர் கே.ரோசய்யா பட்டம் வழங்கினார்.
இதையடுத்து மாணவர் எம்.பிரபுவை கல்லூரித் தலைவர் ஆர்.குப்புசாமி, இயக்குநர் வி.ராஜா, கல்வியியல் கல்லூரி முதல்வர் என்.இந்திராகாந்தி மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பாராட்டினர்.

No comments:

Post a Comment