பிரதமர் நரேந்திர மோடியின், இம்மாத ரேடியோ உரையில், மாணவர்களின் தேர்வு தொடர்பான விஷயங்கள் இடம் பெறும் என, தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும், மான் கீ பாத் என்ற தலைப்பில், நாட்டு மக்களுக்காக ரேடியோ மூலமாக உரை நிகழ்த்தி வருகிறார். கடந்த மாதம், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் சேர்ந்து, பிரதமர் மோடி, ரேடியோவில் பேசினார். இந்நிலையில், பள்ளித் தேர்வுகள் நெருங்குவதை அடுத்து, இம்மாத உரையில், அது தொடர்பான விஷயங்களுக்கு மோடி, முக்கியத்துவம் அளிக்கப் போவதாக, சமூக வலைதளத்தில் அவரே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியுள்ளதாவது: நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள், விரைவில் பொதுத்தேர்வு எழுதப் போகின்றனர். எனவே, என்னுடைய ரேடியோ உரை, அவர்களுக்கு உதவும் வகையில் இருக்க வேணடும் என, விரும்புகிறேன்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தேர்வு அனுபவம் குறித்தும், மாணவர்கள், இதற்கு முந்தையை தங்களின் தேர்வு அனுபவங்கள் குறித்தும், என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம். இவ்வாறு, மோடி கூறியுள்ளார். ஆனாலும், இம்மாதத்தில் மோடி உரை நிகழ்த்துவதற்கான தேதி, இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும், மான் கீ பாத் என்ற தலைப்பில், நாட்டு மக்களுக்காக ரேடியோ மூலமாக உரை நிகழ்த்தி வருகிறார். கடந்த மாதம், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் சேர்ந்து, பிரதமர் மோடி, ரேடியோவில் பேசினார். இந்நிலையில், பள்ளித் தேர்வுகள் நெருங்குவதை அடுத்து, இம்மாத உரையில், அது தொடர்பான விஷயங்களுக்கு மோடி, முக்கியத்துவம் அளிக்கப் போவதாக, சமூக வலைதளத்தில் அவரே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியுள்ளதாவது: நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள், விரைவில் பொதுத்தேர்வு எழுதப் போகின்றனர். எனவே, என்னுடைய ரேடியோ உரை, அவர்களுக்கு உதவும் வகையில் இருக்க வேணடும் என, விரும்புகிறேன்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தேர்வு அனுபவம் குறித்தும், மாணவர்கள், இதற்கு முந்தையை தங்களின் தேர்வு அனுபவங்கள் குறித்தும், என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம். இவ்வாறு, மோடி கூறியுள்ளார். ஆனாலும், இம்மாதத்தில் மோடி உரை நிகழ்த்துவதற்கான தேதி, இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
No comments:
Post a Comment