Saturday, February 7, 2015

புரஜக்டர் மூலம் ஆங்கிலம் கற்பிக்கும் முறை குறித்து ஆய்வு

செங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மாநில குழுவினர் ஆய்வு செய்தனர்.

மாவட்டத்திலேயே முதன்முறையாக உளுந்தூர்பேட்டை தாலுகா செங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் ஆங்கில கல்வியினை புரஜக்டர் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறை துவங்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் அபிராமி வரவேற்றார். உதவி ஆசிரியர்கள் செல்வி, ஜெய்புன்நிஷா மாணவர்களுக்கு புரஜக்டர் மூலம் ஆங்கிலம் கற்பித்தனர். ஊராட்சி எழுத்தர் காமராஜ், கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம், ஆசிரியர்கள் சீனிவாசன், ஷீலா, ஜெய்சுதா, சுதீர், கவிதா, இந்திரா, அனிதா, மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்பாட முறையை மாநில ஆய்வுக் குழு தலைவர் ஜெரோம் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். உதவி தொடக்க கல்வி அலுவலர் தண்டபாணி உடனிருந்தார்.

No comments:

Post a Comment