Saturday, February 7, 2015

முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான தேர்வுகள் முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தமி்ழ்நாடு முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 868 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த மாதம் 10-ம் தேதி நடைபெற்றது.
இத்தேர்வை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 922 பேர் எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
மேலும் சான்றிதழ் சரிபார்ப்பதற்கு தேர்வர்கள் 1:1 என்ற கணக்கில் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்த பட்டியலும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும் தேதி மற்றும் இடம் பினனர் வெளியிடப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment