Tuesday, November 5, 2013

ஆசிரியர்களுக்கான நிதிசார் கல்வியறிவு பயிற்சி: விருதுநகரில் நாளை துவக்கம்

பள்ளி ஆசிரியர்களுக்கான நிதிசார் கல்வியறிவு தொடர்பான பயிற்சி விருதுநகரில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது.
பள்ளிகல்வித்துறை உத்தரவுப்படி மாவட்ட வாரியாக 9ம்வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு நிதிசார் கல்வியறிவு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதை, சென்னை தேசிய பங்குச் சந்தை பிரதிநிதிகள் அளிக்கின்றனர். நாளை(நவ.,6), விருதுநகர் கே.வி.எஸ்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 9ம் வகுப்பு சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கும், நாளை மறுநாள் 12ம் வகுப்பு பொருளாதார பிரிவு ஆசிரியர்களுக்கும் இப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விருதுநகரைச் சேர்ந்த 45 ஆசிரியர்கள், தூத்துக்குடியைச் சேர்ந்த 12 ஆசிரியர்கள் கலந்துகொள்கின்றனர்.

No comments:

Post a Comment