Thursday, January 15, 2015

மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: கல்வித்துறை கண்டிப்பு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என, தலைமை ஆசிரியர்களை, கல்வித்துறை கண்டித்துள்ளது.

பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு
* அரையாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை, பொதுத் தேர்வில் வெற்றிபெற செய்வதே நம் நோக்கம். பத்தாம் வகுப்பு மாணவர்களை, காலை 8:00 மணிக்கு பள்ளிக்கு வரவழைத்து, குறிப்பிட்ட ஆசிரியர்களைக் கொண்டு அமைதியாக படிக்கச் செய்ய வேண்டும்.
* திறமையான மாணவர் தலைமையில் நடுநிலை, கடைநிலை மாணவரும் இடம்பெறும் வகையில், குழு பிரிக்க வேண்டும். அந்த குழுவுக்கு, தினமும் படிக்க வேண்டிய பகுதிகளை பாட ஆசிரியர் பிரித்து தர வேண்டும்.
* சிறு வினா, குறுவினா, பெருவினா, மனப்பாட பகுதிகளை ஒப்புவித்து, பின் எழுதி காட்டச் செய்து ஆசிரியர் திருத்த வேண்டும்.
* எந்தக் காரணத்தை முன்னிட்டும், பள்ளி வளாகத்தில் மாலை 6:00 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. உரிய நேரத்தில் அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, இயக்குனர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment