Wednesday, January 7, 2015

மாநில போட்டிகளில் பங்கேற்க சூலூர் மாணவர்கள் தேர்வு

மண்டல ஜூடோ, வாள் சண்டை போட்டிகள் கோவையில் நடந்தன. பொள்ளாச்சி, நீலகிரி, குன்னூர், கோவை உள்ளிட்ட நான்கு கல்வி மாவட்ட பள்ளிகளை சேர்ந்த, 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

இதில், 14 மற்றும் 17 வயதுக்குட்பட்டோருக்கான ஜூடோ போட்டியில், சூலூர் அடுத்த அப்பநாயக்கன்பட்டி வெங்கடேஸ்வரா உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், 16 பேர் தங்கப் பதக்கங்களை பெற்றனர். 10 பேர் வெள்ளியும், நான்கு பேர் வெண்கலமும் வென்றனர்.
வரும் 27, 28, 29ம் தேதிகளில் சிவகங்கையில் நடக்கும் மாநில போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்றோர் பங்கேற்க உள்ளனர். வாள் சண்டையில் நான்கு பேருக்கு வெள்ளியும், வலைப்பந்து போட்டியில் ஐந்து பேர் வெண்கலமும் பெற்றனர்.

No comments:

Post a Comment