Monday, January 12, 2015

தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம் குறித்த பயிற்சி

திருக்கோவிலூரில் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம் குறித்த பயிற்சி நடந்தது.

திருக்கோவிலூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பயிற்சி முகாமை, ஒருங்கிணைப்பாளர் ராஜா துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர்கள் நடராஜன், ராமச்சந்திரன், லூர்துசாமி, வட்டார வளமைய பயிற்றுநர் ஏழுமலை கருத்தாளர்களாக இருந்து பள்ளி நிர்வாகம் குறித்து பயிற்சி அளித்தனர்.
ஒன்றியத்தை சேர்ந்த 15 பள்ளிகளில் இருந்து வந்திருந்த தலைமை ஆசிரியர்கள், மூத்த பட்டதாரி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் 45 பேர், பயிற்சி பெற்றனர்.

No comments:

Post a Comment