Tuesday, May 13, 2014

கால்நடை மருத்துவ படிப்புக்கு முதன்முதலாக இணைதளத்தில் விண்ணப்பிக்கும் முறை

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக படிப்புக்கு நேற்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. முதன்முதலாக இணைதளத்தில் விண்ணப்பிக்கும் முறை இந்தாண்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

2000 விண்ணப்பங்கள்
சென்னை வேப்பேரியில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2014-15ம் ஆண்டு இளநிலை பட்ட படிப்புக்களுக்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் வழங்கப்படுகின்றன.
கால்நடை மருத்துவம் உணவுத் தொழில்நுட்பம் கோழியின உற்பத்தி தொழில்நுட்பம் ஆகிய படிப்புக்களுக்கான விண்ணப்பங்கள் சென்னையில் வேப்பேரி மாதவரம் உட்பட நாமக்கல் திருநெல்வேலி என 14 மாவட்ட மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
துவக்க நாளான நேற்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளரும் துணைவேந்தர் பொறுப்பாளருமான ஹரிகிருஷ்ணன் மாணவ மாணவியருக்கு விண்ணப்பங்களை வழங்கி கூறியதாவது: இந்த மாதம் 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். அதை ஜூன் 2ம் தேதி மாலைக்குள் சமர்பிக்க வேண்டும். கடந்த ஆண்டை காட்டிலும் 5000 விண்ணப்பங்கள் அதிகமாக அதாவது 20 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு உள்ளன.
சென்னையில் 120 நாமக்கல்லில் 80 ஒரத்தநாடு மற்றும் திருநெல்வேலியில் தலா 40 என மொத்தம் 280 இடங்கள் உள்ளன. அவை தவிர கொடுவள்ளியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள உணவு பதப்படுத்துதல் படிப்புக்கு 20 இடங்களும் ஒசூரில் துவங்கப்பட்டுள்ள கோழியின உற்பத்தி தொழில்நுட்ப படிப்புக்கு 20 இடங்களும் உள்ளன.
ஆகஸ்ட் இறுதியில்...
இந்தாண்டு முதல்முறையாக ஆன்-லைனிலும் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். www.tanuvas.ac.in/ugadmission என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங்களுடன் புகைப்படம் ஒட்டி குறித்த தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
இந்தாண்டு உணவு தொழில்நுட்பம் கோழியின உற்பத்தி தொழில்நுட்பம் ஆகிய படிப்புக்களுக்கு வரவேற்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். செப்டம்பர் முதல் வாரம் அல்லது ஆகஸ்ட் இறுதியில் கால்நடை படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment