கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் இந்த ஆண்டு
தனியார் பள்ளிகளில் 89 ஆயிரத்து 954 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக
மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, 25 சதவீத
இடஒதுக்கீட்டின்கீழ் 2013-14ம் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் 49,864
மாணவ, மாணவி களும், நடப்பு கல்வி ஆண்டில் 89,954 பேரும்
சேர்க்கப்பட்டுள்ளனர்.
2013-14ம் ஆண்டில் சேர்க்கப் பட்ட மாணவர்களுக்காக தனியார் பள்ளிகளுக்கு
வழங்க வேண்டிய கல்விக் கட்டணம் ரூ.25.13 கோடி கோரி அரசிடம்
கேட்கப்பட்டுள்ளது. 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் நுழைவுநிலை வகுப்பில்
(1-ம் வகுப்பு) ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப் பிப்பதற்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடு மே 3 முதல் 9-ம் தேதி வரை என்பது மே 18-ம்
தேதி வரை நீட்டிப்பு செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்
சட்டத்தின்படி, வாய்ப்பு கள் மறுக்கப்பட்ட மற்றும் நலி வடைந்த பிரிவினர்
அனைவரும் பயன்பெற வசதியாக பள்ளி தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்கள் வரை
இச்சேர்க்கையை மேற்கொள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை
அனுப்பப்பட்டு, அதன் படி மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ள னர். இவ்வாறு அந்த
செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment