Friday, December 5, 2014

அரசுப் பள்ளியில் நேர்மை அங்காடி துவக்கம்

கோவை இடிகரை அரசுப் பள்ளியில், நேர்மை அங்காடி துவங்கப்பட்டது.
பள்ளி வளர்ச்சி திட்டத்தில், சி.ஆர்.ஐ., பம்ப் நிறுவனம், ஐந்து ஆண்டுகளுக்கு ஒன்பது அரசுப் பள்ளிகளை தத்தெடுத்துள்ளது. இந்த ஒன்பது பள்ளிகளில், இடிகரை அரசுப் பள்ளியும் ஒன்று.
இப்பள்ளியில், நேர்மை அங்காடி துவங்கப்பட்டுள்ளது. இங்கு, மாணவர்களுக்கு தேவையான எழுதுபொருட்கள், அழிப்பான் உட்பட 22 வகையான பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்.
அவற்றின் நியாயமான விலைப் பட்டியலும், ஒரு உண்டியலும் வைக்கப்பட்டிருக்கும். மாணவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு, அதற்கு உகந்த ரூபாயை உண்டியலில் போட வேண்டும். நேர்மையின் முக்கியத்துவத்தை மாணவர்கள் புரிந்துகொண்டு தங்களை அதற்கு ஏற்ப தயார் செய்து கொள்ள வேண்டும் என இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment