Saturday, December 27, 2014

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஊக்குவிப்பு பயிற்சி முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஊக்குவிப்பு பயிற்சி முகாம் நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவித் பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் 650 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அதிக மதிப்பெண்கள் பெற பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இவர்கள் மருத்துவம்,பொறியியல், வேளாண்மை ஆகிய உயர் படிப்புகளை மேற்கொள்வதற்காக சிறந்த ஆசிரியர்கள், வல்லுனர்கள் மூலம் வழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகிறது. சின்னசேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கும், கள்ளக்குறிச்சி அடுத்த பெரிய சிறுவந்தூர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கும் ஊக்குவிப்பு பயிற்சி முகாம், இன்று (26ம் தேதி) துவங்கி, வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. இத்தகவலை விழுப்புரம் சி.இ.ஓ., மார்ஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment