Wednesday, December 3, 2014

மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு ரேங்க் முறை அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில், குறைந்து வரும் மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க, ஆசிரியர்களுக்கு ரேங்க் முறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி
தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கல்வி மாவட்ட அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, லோகநாதன், ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி பேசியதாவது: மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்பு மாணவர்கள் வாசிப்பு திறன் குறைந்து வருகிறது. இதேநிலை நீடித்தால் பொதுத் தேர்வுகள் தேர்ச்சி பாதிக்கும்.
எனவே ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் முழு கவனம் செலுத்தி மாணவர்கள் குறைகளை சொல்லாமல் நல்வழிப்படுத்த வேண்டும். நன்னெறி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
ரோல் மாடல், கற்பித்தல் பணி, சமுதாய பணிகளில் ஆர்வம், பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருத்தல் போன்ற செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு, சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு ரேங்க் வழங்கி கவுரவிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment