Friday, December 12, 2014

உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் 649 பேருக்கு டிச.16-ல் நிர்வாக பயிற்சி

தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சென்னை, விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த கூடுதல் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான நிர்வாகப் பயிற்சி டிசம்பர் 2 முதல் 5-ம் தேதி வரை சென்னையில் நடந்தது.
இதைத் தொடர்ந்து வேலூர், சேலம், கோவை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி ஆகிய 8 மண்டலங்களைச் சேர்ந்த 649 கூடுதல் மற்றும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான நிர்வாகப் பயிற்சி வரும் 16-ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதி வரை வெவ்வேறு நாட்களில் சென்னையில் நடைபெறும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment