Wednesday, December 3, 2014

உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான நிர்வாகப் பயிற்சி

உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான நிர்வாகப் பயிற்சி, சென்னையில் அளிக்கப்பட்டது.
தொடக்கக் கல்வி இயக்கம் கட்டுப்பாட்டில் பணிபுரியும், 836 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, நிர்வாகப் பயிற்சி அளிக்க, அரசு உத்தரவிட்டது. அதன்படி, முதல் கட்டமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 73 பேருக்கு, சென்னையில், பயிற்சி வகுப்பு நடந்தது.

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் வீரமணி, 32 தலைப்புகள் கொண்ட, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான கையேடை வெளியிட்டார். மேலும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆங்கில உச்சரிப்பை, சரியான முறையில் கற்க வேண்டும் என்பதற்காக, தயார் செய்யப்பட்டுள்ள குறுந்தகதடையும், அமைச்சர் வெளியிட்டார்.
பயிற்சி வகுப்பு துவக்க நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா, அனைவருக்கும் கல்வி இயக்க, மாநில திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன் வரவேற்றார்.

No comments:

Post a Comment