Tuesday, December 16, 2014

அறிவியல் மற்றும் கணித கண்காட்சியில் பரமக்குடி பள்ளி ஆசிரியர் சாதனை

மாநில அளவில் சென்னையில் நடந்த அறிவியல் மற்றும் கணித கண்காட்சியில், பரமக்குடி சவுராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் நாகராஜன் சாதனை படைத்தார்.

டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் ஆசிரியர்களுக்கான, மாநில அளவிலான 42 வது ஜவஹர்லால் நேரு அறிவியல் மற்றும் கணித கண்காட்சி நடந்தது. இதில், சவுராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் நாகராஜனின் படைப்பான, ஆழ் குழாய் மோட்டாரில் தண்ணீரின் அளவை கண்டறியும் கருவி தேர்வு பெற்றது.
அதனை தொடர்ந்து, இவர் கேரளா மாநிலம் திருச்சூரில் நடைபெற உள்ள தென்னிந்திய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார்.

No comments:

Post a Comment