Wednesday, December 3, 2014

வி.ஏ.ஓ. தேர்வின் முடிவுகள் எப்போது?

கடந்த ஜுன் மாதம் 14ம் தேதி, வி.ஏ.ஓ. தேர்வினை டி.என்.பி.எஸ்.சி. நடத்தியது.
ஆனால், அதன் பிறகான காலகட்டங்களில், வேறு பல தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நடத்தப்பட்டதோடு, தற்போது குரூப் 4 தேர்வும், டிசம்பர் 21ம் தேதி நடக்கவுள்ளது.

அதுமட்டுமின்றி, 2015ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள 2 தேர்வுகளுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த ஜுன் மாதம் 14ம் தேதி நடைபெற்ற வி.ஏ.ஓ. தேர்வின் முடிவுகள், இன்னும் அறிவிக்கப்படவேயில்லை. அதன் முடிவுகளை TNPSC எப்போது வெளியிடும் என்று தேர்வெழுதியோர் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment