Friday, October 25, 2013

குரூப்-1 தேர்வு இன்று முதல் துவக்கம்

டி.என்.பி.எஸ்.,யால் நடத்தப்படும் குரூப் - 1  தேர்வு இன்று காலை 10 மணிக்கு துவங்குகிறது.
குரூப் 1 பிரதானத் தேர்வு, அக்டோபர் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னை தேர்வு மையத்தில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளவர்கள் நுழைவுச்சீட்டை தேர்வாணைய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு மூன்று நாள்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

www.tnpsc.gov.in தேர்வாணைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் contacttnpscgmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறைதீர்க்கும் கட்டணமில்லாத தொலைபேசி எண்ணான 18004251002-இன் மூலமாகவோ கேட்டுத் தெளிவு பெறலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment