Monday, October 28, 2013

சேதமடைந்த கட்டடங்களில் பாடம் நடத்த வேண்டாம்: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

பருவ மழை துவங்கிவிட்டதால் சேதமடைந்த அரசு பள்ளி கட்டடங்களில் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுரை வழங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பருவமழை துவங்கிய தொடர்ந்து பெய்துவருகிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடும் அளவுக்கு மழை பெய்து வருகிறது.
ஆனால் தென் மாவட்டங்களில் இன்னும் போதிய மழை பெய்ய துவங்காவிட்டாலும் அடுத்துவரும் நாட்களில் நல்ல மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பருவ மழையை தொடர்ந்து மாநிலம் முழுவதும் வருவாய்த்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கண்மாய்கள், குளங்களை 24 மணிநேரமும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment