Friday, October 4, 2013

அகஇ - 2013-14ம் ஆண்டுக்கான 40% தொடக்க / உயர் -தொடக்க ஆசிரியர்களுக்கு "SOCIAL AWARENESS AND CYBER SAFETY" என்ற தலைப்பில் 19.10.13 அன்று தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும், 26.10.13 அன்று உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் வட்டார வள மையப் (BRC) பயிற்சி நடத்த உத்தரவு

2013-14 கல்வி ஆண்டிற்கு தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப்பயிற்றுநர்கள் ஆகியோர்களுக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும், அனைவருக்கும் கல்வி இயக்கமும் இணைந்து பணியிடைப் பயிற்சிகள் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.


இதன் தொடர்ச்சியாக, தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில் 19.10.2013 (தொடக்க நிலை) மற்றும் 26.10.13 (உயர் தொடக்க நிலை ) ஆகிய நாட்களில் Social Awareness and Cyber Safety என்ற தலைப்பில் பயிற்சியின வழங்கிட வேண்டும். இதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சியினை வழங்கிட  திட்டமிடப்பட்டுள்ளதாக அனைவருக்கும் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment