Wednesday, October 30, 2013

மாணவர்கள் சத்தான உணவு உண்ண வேண்டும்: கல்வி அதிகாரி அறிவுரை

மாணவர்கள் காலை உணவை தவிர்த்தல் கூடாது. சத்தான உணவு உண்ணவேண்டும்" என மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் கூறினார்.

விருதுநகர் ஆவுடையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி தலைமையில் ஆண்டாய்வு நடந்தது. முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார், "மாணவர்கள் காலை உணவினை தவிர்த்தல் கூடாது நல்ல சத்தான உணவு உண்ணவேண்டும்" என, அறிவுறுத்தினார்.
 "பள்ளி அருகே ஈ மொய்க்கும் மற்றும் தரமில்லாத உணவு பொட்டலங்களை விற்க அனுமதிக்கக்கூடாது" என, தலைமையாசிரியரிடம் முதன்மைக் கல்வி அதிகாரி அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment