Thursday, February 13, 2014

மாற்றுத்திறனாளி ஆசிரியருக்கு தகுதித்தேர்வு பயிற்சி

சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ள 40 நாட்கள் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்ளும்படி, முதல்வர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழக முதல்வர், சட்டசபையில் தெரிவித்ததற்கு இணங்க, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு -2014க்காக, சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் 40 நாட்கள் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.
மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறவுள்ள பார்வையற்ற ஆசிரியர்கள், தங்கள் பெயர், விலாசம், கைபேசி எண் ஆகியவற்றை, அரசினர் பெண்கள் பள்ளி, சேலம்-1 மையத்தில், இன்று முதல் பிப்ரவரி 19 வரையில், காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை (அரசு விடுமுறை நீங்கலாக) நிறுவன முதல்வரிடம் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இலவச பயிற்சி நடைபெறும் மையம் மற்றும் பயிற்சி நாட்கள் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு, 73730 03460 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment