Sunday, February 23, 2014

இடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வு அறிவிப்பு

பள்ளி கல்வி துறையில், இடைநிலை ஆசிரியர் 498 பேரை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு செய்வதற்கான கலந்தாய்வு "ஆன்-லைன்" முறையில் இன்று நடக்கிறது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், இந்த கலந்தாய்வு நடக்கிறது. மேலும், கடந்த ஆண்டுகளில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, நேரடியாக ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்த, 152 பேருக்கான பணி நியமன கலந்தாய்வு இன்று பிற்பகல் 2:30 மணிக்கு, முதன்மை கல்வி அலுவலகங்களில் நடக்கிறது.

No comments:

Post a Comment