ஆய்வு கட்டுரை சமர்பித்த தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி மாணவர்
முதல் பரிசு பெற்றார். சென்னை அறிவியல் கழகமும்,சென்னை அண்ணா பல்கலையும்
இணைந்து பள்ளி மாணவர்களுக்கு, அறிவியல் ஆய்வுக்கட்டுரை சமர்பிக்கும் போட்டி
நடத்தியது.
இப்போட்டியில், தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 62 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. தேனி நாடார் சரசுவதி மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆர்.பிரபு சங்கர் சமர்பித்த, "தகவல் தொழில் நுட்பவியல் துறையில் ஏ.டி.எம்., பாதுகாப்பு" என்னும் தலைப்பிலான ஆய்வுக் கட்டுரை, மாநில அளவில் முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.
சென்னையில் நடந்த விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன்,மாணவர் பிரபு சங்கருக்கு பரிசு வழங்கினார். அண்ணா பல்கலை துணை வேந்தர் ராஜாராம்,சென்னை அறிவியல் கழக தலைவர் குற்றாலிங்கம் பங்கேற்றனர். சாதனை மாணவர் பிரபு சங்கர், தலைமை ஆசிரியர் பாண்டிக்குமார், ஆசிரியர்கள் பாண்டியன், ஜெயச்சந்திர பாலன் ஆகியோரை, செயலாளர் ஜவகர், தலைவர் சங்கரக்குமார் உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.
இப்போட்டியில், தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 62 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. தேனி நாடார் சரசுவதி மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆர்.பிரபு சங்கர் சமர்பித்த, "தகவல் தொழில் நுட்பவியல் துறையில் ஏ.டி.எம்., பாதுகாப்பு" என்னும் தலைப்பிலான ஆய்வுக் கட்டுரை, மாநில அளவில் முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.
சென்னையில் நடந்த விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன்,மாணவர் பிரபு சங்கருக்கு பரிசு வழங்கினார். அண்ணா பல்கலை துணை வேந்தர் ராஜாராம்,சென்னை அறிவியல் கழக தலைவர் குற்றாலிங்கம் பங்கேற்றனர். சாதனை மாணவர் பிரபு சங்கர், தலைமை ஆசிரியர் பாண்டிக்குமார், ஆசிரியர்கள் பாண்டியன், ஜெயச்சந்திர பாலன் ஆகியோரை, செயலாளர் ஜவகர், தலைவர் சங்கரக்குமார் உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.
No comments:
Post a Comment