Thursday, March 27, 2014

மருத்துவமனையில் தேர்வு எழுதிய 10ம் வகுப்பு மாணவி

விபத்தில் சிக்கிய 10ம் வகுப்பு மாணவி, அரசு மருத்துவமனையில், ஆசிரியர் உதவியுடன், தேர்வு எழுதியுள்ளார்.
கடலூர் மாவட்டம், வீரபெருமாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி, 15; பண்ருட்டி சுப்புராய செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவி.
பொதுத் தேர்வு எழுத நேற்று காலை, 8:00 மணிக்கு, தன் சகோதரருடன், பைக்கில் வந்து கொண்டிருந்தார். செட்டிப்பாளையம் அருகே, எதிரே வந்த பைக் மோதியதில், பாக்கிய லட்சுமியின், கை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விபத்து குறித்து, முதன்மை கல்வி அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது. பள்ளிக் கல்வி இயக்குனரின் சிறப்பு அனுமதி பெற்று, ஆசிரியர் உதவியுடன், மருத்துவமனையில் தேர்வு எழுத அனுமதி அளித்தனர். வினாக்களுக்கு உரிய விடைகளை, மாணவி கூற, காலை, 11:00 மணி முதல் பகல், 1:30 மணி வரை, ஆசிரியர் தேர்வு எழுதினார்.

No comments:

Post a Comment