சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 வகுப்பினருக்கு நடந்து முடிந்த, இயற்பியல்
தேர்வுக்கான மூன்று வினாத்தாள், தேர்வுக்கு முன்பே இணையதளத்தில்
வெளியானதாக, தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 3ம் தேதி முதல் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு துவங்கிய நிலையில் 5ம் தேதி இயற்பியல் தேர்வு நடந்தது. மணிப்பூர் மாநிலத்தில் இயற்பியல் தேர்வுக்கான வினாத்தாள், தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்பே இணையதளம் மற்றும் "பேஸ்புக்" மூலம் வெளியானதாகவும், தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களிலும் இணையதளத்தில் இருந்து, வினாத்தாளை சிலர் பெற்றதாக தகவல் வெளியானது.
மணிப்பூரில் இப்பிரச்னை பூதாகரமானாலும், தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளி நிர்வாகிகள், கண்டு கொள்ளாமல் இயற்பியல் தேர்வை நடத்தி முடித்தனர். இந்நிலையில் சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சர்மா வெளியிட்டுள்ள அவசர சுற்றறிக்கையில், "நிர்வாக காரணங்களால், இயற்பியல் தேர்வு ரத்து செய்யப்பட்டு அதற்கான மறுதேர்வு, மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தேர்வு மையங்களில், ஏப்., 2ம் தேதி காலை 10:30 முதல் 1:30 மணி வரை நடக்கும்" என தெரிவித்துள்ளார்.
கடந்த 3ம் தேதி முதல் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு துவங்கிய நிலையில் 5ம் தேதி இயற்பியல் தேர்வு நடந்தது. மணிப்பூர் மாநிலத்தில் இயற்பியல் தேர்வுக்கான வினாத்தாள், தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்பே இணையதளம் மற்றும் "பேஸ்புக்" மூலம் வெளியானதாகவும், தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களிலும் இணையதளத்தில் இருந்து, வினாத்தாளை சிலர் பெற்றதாக தகவல் வெளியானது.
மணிப்பூரில் இப்பிரச்னை பூதாகரமானாலும், தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளி நிர்வாகிகள், கண்டு கொள்ளாமல் இயற்பியல் தேர்வை நடத்தி முடித்தனர். இந்நிலையில் சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சர்மா வெளியிட்டுள்ள அவசர சுற்றறிக்கையில், "நிர்வாக காரணங்களால், இயற்பியல் தேர்வு ரத்து செய்யப்பட்டு அதற்கான மறுதேர்வு, மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தேர்வு மையங்களில், ஏப்., 2ம் தேதி காலை 10:30 முதல் 1:30 மணி வரை நடக்கும்" என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment