Sunday, March 23, 2014

மேலந்தல் பள்ளி ஆசிரியர்கள் மீது மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை

பள்ளிக்கு வராமல் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட ஏழு ஆசிரியர்கள் மீது, மாவட்ட கல்வி அதிகாரி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மேலந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 9 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இதில் ஒருவர் மகப்பேறு விடுப்பிலும், மற்றொருவர் தேர்தல் பணிக்கு சென்றார். மீதமுள்ள, ஏழு ஆசிரியர்கள் இம்மாதம் 6ம் தேதி முதல், மூன்று நாட்கள் பள்ளிக்கு வரவில்லை. இதனால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு, கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். கடந்த, 10ம் தேதி, பணிக்குத் திரும்பிய ஏழு ஆசிரியர்கள், மூன்று நாட்களும் வேலை செய்ததாக வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுள்ளனர். அன்று மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மேற்கொண்ட அதிரடி ஆய்வில், மூன்று நாட்கள் பள்ளி மூடப்பட்டிருந்த நிலையில் ஏழு ஆசிரியர்களும் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட சம்பவம் அம்பலமானது.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகம், ஏழு ஆசிரியர்களிடமும் விளக்கம் கேட்டு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment