Friday, March 21, 2014

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., நுழைவுத்தேர்வு நாளை தொடக்கம்

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., மற்றும் எம்.டெக்., பாடப்பிரிவுகளுக்கான நுழைவு தேர்வுகள் நாளை துவங்குகிறது.

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., பாடப் பிரிவுக்கான, தமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2014, ஈரோடு உட்பட 5 மண்டலங்களில், நாளை (22ம் தேதி) மற்றும் 23ம் தேதி நடக்க உள்ளது. இதில், ஈரோடு மண்டலத்தில், ஐ.ஆர்.டி.டி., மற்றும் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி, திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி, பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி, திண்டல் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி ஆகிய, ஐந்து மையங்களில் தேர்வு நடக்கிறது.
காலை, பத்து முதல், 12 மணி வரை, மதியம், 2.30 முதல், 4.30 மணி வரை தேர்வுகள் நடக்கிறது.நாளை காலை எம்.சி.ஏ., பாட பிரிவுக்கும், மாலையில் எம்.பி.ஏ., பாட வகுப்புக்கும் தேர்வு நடக்கிறது. இதே போல், 23ம் தேதி எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., ஆகிய பாட பிரிவுகளுக்கு தேர்வு நடக்கிறது.
ஹால் டிக்கெட்டில் குறைபாடுகள் இருந்தால், இன்று (21ம் தேதி), ஈரோடு ஐ.ஆர்.டி.டி.,யில் அண்ணா பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளரை அணுகி பெறலாம். நுழைவு தேர்வை முன்னிட்டு, அனைத்து மையங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள்  இயக்க, அரசு போக்குவரத்து கழக நிர்வாகிகளுக்கு, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்று ஈரோடு .ஆர்.டி.டி., முதல்வர் மயில்சாமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment