Sunday, January 19, 2014

மாணவர்கள் போக்குவரத்துக்கு ரூ.1.84 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில், பள்ளி மற்றும் பேருந்து வசதி இல்லாத பகுதி மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம், 1.84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மற்றும் பேருந்து வசதி இல்லாத, 813 குடியிருப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் 11 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் உள்ளனர். இவர்களில் தொடக்கப் பள்ளிகளில் 8 ஆயிரம் பேரும், நடுநிலைப் பள்ளிகளில் மூன்றாயிரம் பேரும் வெளியூர்களில் உள்ள பள்ளிகளுக்கு சென்று பயில்கின்றனர்.

இவர்களுக்கு, ஆட்டோ, வேன், ஜீப் வசதி செய்து கொடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான நிதியை, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒரு மாணவருக்கு, மாதம் 300 ரூபாய் வீதம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த, 2012-13 கல்வியாண்டில் 4,857 மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக நிதி ஒதுக்கப்பட்டது. இந்த கல்வியாண்டு, மீதியுள்ள, 6,145 பேருக்கு, 1.84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியை சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோரிடம் பயனீட்டு சான்று பெற்று, வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment