Friday, January 17, 2014

தொட்டபெட்டாவில் 48 பள்ளிகளுக்கு விடுமுறை

ி: ஊட்டி தொட்டபெட்டா சுற்றுப்பகுதிகளில், மூன்று பேரைக் கொன்ற புலி இன்னும் பிடிபடாததால், அப்பகுதிகளில் உள்ள 48 பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா சுற்றுப்பகுதியில், புலியைத் தேடும் பணி நடந்து வருவதால் கடந்த, 7ம் தேதியில் இருந்து அப்பகுதிகளில் உள்ள 48 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுவரை புலி பிடிபடாத காரணத்தால் மீண்டும் அந்த, 48 பள்ளிகளுக்கும் இன்று (17ம் தேதி) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சங்கர் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment