Wednesday, January 29, 2014

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு வரும் 8ம் தேதி துவங்குகிறது

அரசு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வுகள் வரும் பிப்ரவரி 8ம் தேதி துவங்குகிறது.
இது குறித்து தமிழக தட்டச்சு பயிலக உரிமையாளர்கள் சங்க மாநில பொதுச் செயலர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் தொழில் நுட்பக் கல்வித்துறை மூலம் நடத்தப்படும் தட்டச்சு, சுருக்கெழுத்துத் தேர்வுகளின் கால அட்டவணைப்படி வரும் பிப்ரவரி 8ம் தேதி சுருக்கெழுத்து தமிழ் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வு நடக்கிறது.

பிப்ரவரி 9ம் தேதி சுருக்கெழுத்து ஆங்கிலம், இளநிலை, இடைநிலை மற்றும் முதுநிலைத்தேர்வுகளும் பிப்ரவரி 15ம் தேதி தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலைத்தேர்வு 4 அணிகளாக நடக்கிறது. 16ம் தேதி இளநிலைத் தேர்வின் 5வது அணியும், தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலைத் தேர்வுகள் 3 அணிகளாகவும் நடக்கிறது.
அன்றைய தினமே ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் உயர் வேகத்தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் அரசு தட்டச்சு பாடத்தேர்வுகள் 96 தேர்வு மையங்களில் நடக்கிறது.
கடலூர் மாவட்டத்தில் கிருஷ்ணசாமி நினைவு பாலிடெக்னிக் கல்லூரி, சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிக், நெய்வேலி விவேகானந்தா பாலிடெக்னிக், விருத்தாசலம் செராமிக் கல்லூரி ஆகிய 4 மையங்களில் நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஏழுமலை பாலிடெக்னிக், திண்டிவனம் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும், புதுச்சேரி மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி மையங்களில் தட்டச்சு தேர்வுகள் நடக்கிறது.

No comments:

Post a Comment