Wednesday, January 29, 2014

சான்றிதழ் சரி பார்ப்பில் பங்கேற்காத டி.இ.டி. தேர்வர்களுக்கு இன்று கடைசி வாய்ப்பு

"கடந்த 2012 - 13ம் ஆண்டுகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத தேர்வர்கள் கடைசி வாய்ப்பாக இன்று நடக்கும் முகாம்களில் பங்கேற்கலாம்" என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்து உள்ளது.

வாரியத்தின் அறிவிப்பு: கடந்த ஆண்டு ஆக., மாதம் நடந்த டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில் பங்கேற்காதவர்கள் இன்று நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.
2012ல் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத தேர்வர்களும் இதில் பங்கேற்கலாம்; இதுவே கடைசி வாய்ப்பு. இவ்வாறு டி.ஆர்.பி. தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment