Monday, January 13, 2014

பொங்கல் முன்பணம்: ஆசிரியர்கள் தவிப்பு

திருப்பரங்குன்றம் கல்வி ஒன்றியத்தில், ஆசிரியர்களுக்கு பொங்கல் முன்பணம் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.5 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், திருப்பரங்குன்றம் பிளாக்கில், பலருக்கு இப்பணம் கிடைக்கவில்லை.
சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரியிடம் கேட்டால், எந்த பயனும் இல்லை என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜேம்ஸ் செல்வராஜ் கூறுகையில், "முன்பணம் கோரிய அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டு விட்டது" என்றார். அதிகாரியோ "வழங்கப்பட்டுவிட்டது" என்கிறார்; ஆசிரியர்களோ "இல்லை" என்கின்றனர். இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட கல்வி அதிகாரிகள் முன்வரவேண்டும்.

No comments:

Post a Comment