Monday, January 20, 2014

தாமதமாகும் குரூப்-2 தேர்வு விண்ணப்ப அறிவிப்பாணை

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக அறிவிப்பாணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., சார்பில், சில நாட்களுக்கு முன் வெளியான அறிவிப்பில், "2014ம் ஆண்டிற்கு தேவைப்படும் குரூப்-2 பணியிடங்கள் 1181. இதற்கான அறிவிப்பாணை 2014, ஜன., 3வது வாரத்தில் வெளியாகும். அதன் பின் ஆன்லைனில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், 18.5.2014ல் தேர்வும், ஆக., 3வது வாரத்தில் தேர்வு முடிவு அறிவிக்கப்படும்" எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஜன.,20ம் தேதியை கடந்த நிலையில், குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பாணை இதுவரை வெளியாகவில்லை. ஜன., முதல் டிச., வரை 22 வகை தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி., நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் இந்தாண்டுக்கான முதல் அறிவிப்பே குரூப்-2 தேர்வு தான். ஆனால், முதல் தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியாவதிலேயே தாமதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment