Monday, January 27, 2014

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு

மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணியை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நிர்வாகிகள் சந்திரன், சுரேஷ், உக்கிரபாண்டி ஆகியோர் தெரிவித்துள்ளதாவது: "மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் 2003 முதல் 2006ம் ஆண்டு வரை பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை ரத்து செய்து, பணிவரன் முறை வழங்க வேண்டும்; பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை எண்: 720ல் திருத்தம் செய்ய வேண்டும் என்பது உட்பட 5 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், சங்க மாநில செயற்குழு, ஈரோட்டில் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் மதுரை மாவட்டத்திலும் மார்ச்சில் நடக்கும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்" என்றனர்.

No comments:

Post a Comment