Friday, November 7, 2014

10ம் வகுப்பு பாட ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம்

கடலூர் கல்வி மாவட்ட 10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் துவங்கியது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 229 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 1000த்திற்கும் மேற்பட்ட 10ம் வகுப்பு பாட ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாமிற்கு அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, கடலூர் கல்வி மாவட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம், கடலூர் செயின்ட் ஆன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது. இதில், 210 கணித ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் செந்தில்ராஜ், ஆசிரியர்கள் அமுதா, தரணிதரன், ராமச்சந்திரன், சக்திவேல், செல்வம் ஆகியோர் கருத்தாளர்களாக பங்கேற்று, தேர்வுக்கு பயமின்றி மாணவர்களை தயார் செய்வது எப்படி, மன அழுத்தத்தை தவிர்ப்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
பயிற்சி இன்று முடிகிறது. மைய ஒருங்கிணைப்பாளர் விஜயா, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மலர்முகம் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment